Current Affairs
தாமஸைக்
கொன்றது யார்?


Archives

 Inscriptions
  பெரும்புலியூர்
  கீழமங்கலம்

 Copper Plates
  அவல்பூந்துறை

 Video
  TV Interviews

What We Write & What They Publish

  Deccan Chronicle
  Amman Darisanam
  Panimayam (Tamil)
  Dinamalar (Tamil)
  Puthiya Parvai (Tamil)
  Kalachuvadu (Tamil)
  Ananda Vikatan (Tamil)
  Junior Vikatan (Tamil)
  Thinnai.com
About us

Projects

Contact us

South Indian Social History Research Institute

தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்

SISHRI Community Services
Online Income Tax calculator for the Tax Payers in India (FY 2007-2008)

பேதக மறுத்தல் - எஸ். இராமச்சந்திரன்

பகுத்தறிவு - இந்து மதம் - பிறப்பு அடிப்படை

- - -அம்பேத்கர் அவர்கள், “பிராமணர்களே சாதியைப் படைத்தனர் எனும் கோட்பாடு அர்த்தமற்றதே. மனுவைப் பற்றி நான் விளக்கியதற்கும் மேலாக சொல்வதற்கு எதுவுமில்லை. பிராமணர்கள் பல வகைகளில் குற்றமிழைத்தவர்களாக இருக்கலாம்; குற்றமிழைத்தவர்கள்தான் என்று நான் துணிந்து கூறவும் செய்வேன். ஆனால், சாதி முறையைப் பிராமணர்கள், பிராமணரல்லாதோர் மீது திணித்தார்கள் என்பது உண்மையல்ல” என்கிறார்...- - -<தொடர்ச்சி>

தில்லை கோயில் பிரச்சினை குறித்து

- - -தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களிலிருந்து ஆற்று மணல், அரியவகை மண், மரங்கள் என இயற்கை வளங்களையெல்லாம் கொள்ளையடிக்க அனுமதித்துப் பங்கு பெற்று, நாட்டைப் பாலைவனமாக்கி, உலகப் பணக்காரர் பட்டியலை நோக்கிக் குறிவைத்துப் பயணம் செய்துகொண்டே, ஆறுமுகசாமிக்கு மாதம் ரூ. 3000 தந்து பாவ நிவர்த்தி வேண்டுகிறவர்கள்தாம் சமூகத்தில் கனன்று கொண்டிருக்கும் பல சமூகப் பிரச்சினைகளுக்கு மூல காரணமாக இருக்கிறார்கள்.....- - -<தொடர்ச்சி>

திராவிட இயக்கப் பகுத்தறிவு

- - -அதுதான் ‘பகுத்தறிவு மூடநம்பிக்கை'யில் ஆழ்ந்திருக்கும் / ஆழ்த்தப்பட்டிருக்கும் கூட்டம். திராவிட இயக்கம் அவர்களின் கோயில்; அதன் கருவறையில் இருக்கும் பெரியார் அவர்களின் கடவுள். இதே பாணியில், மார்க்ஸ் மூலவர், பெரியார் உற்சவ மூர்த்தி என்று சொல்கின்ற இன்னொரு பிரிவும் உண்டு. இவ்விரு சாராரையும் விட சமூகம் மிகப் பெரியது...- - -<தொடர்ச்சி>

தமிழரைத் தேடி - 6

- - -குறுநில மன்னர் அந்தஸ்தில் இருந்த கொண்டையன்கோட்டை மறவரின் தலைவனிடம், மகட்கொடை கேட்டுப் பிற்காலப் பாண்டிய மன்னன் ஒருவன் தூது அனுப்புகிறான். அதற்கு மறுமொழி கூறுமிடத்து, ராஜகுலத்துக்கு நாங்கள் மகட்கொடை கொடுக்க முடியாது என்றும், ராஜகுலமானது பெண்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதில்லை எனவும் கூறி, புராணகால அரசர்களின் செயல்களை மேற்கோள் காட்டுகின்றனர்....- - -<தொடர்ச்சி>

தமிழரைத் தேடி - 5

- - -தமிழக வேந்தர் குடியினருக்கோ இத்தகைய சிக்கல்கள் ஒருபோதும் தோன்றியதில்லை. வேந்தர்கள் மகற்கொடை மறுத்த தலைவர்களின் ஊரை அழித்து, அவர்களுடைய மகளிரைக் கைப்பற்றி, ‘கொண்டி மகளிராக்கி' விடுவரேயன்றி, மணம் புரிவதில்லை. இக்கொண்டி மகளிர் மூலம் ஏவல் மரபினராகிய வேளாளரின் கீழ்ப்பிரிவு தோன்றிவிடுகின்றது. இம்மரபு, பண்பட்ட நிலபிரபுத்துவச் சமூக அமைப்பிற்கான சிறந்த வழிமுறையாகும்.....- - -<தொடர்ச்சி>

தமிழரைத் தேடி - 4

- - -சங்க காலத்தின் தொடக்கத்திலேயே தமிழ்ச் சமூகத்தில் வேளாளரை உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்திய போக்கினைக் காணமுடிகிறது. சம காலத்தில் வட இந்தியச் சமூகம் வீரயுக அரசியல் அமைப்பிலிருந்து அதிகம் முன்னேறியிருக்கவில்லை. எனவே, அங்கு உழவுத் தொழில் பெரும்பாலும் வைசியராலேயே மேற்கொள்ளப்பட்டது. இவ்வகையில் சங்க காலத் தமிழ்ச் சமூகத்தைவிட சமகாலத்திய வட இந்தியச் சமூகம் பண்பாட்டு வளர்ச்சியில் சற்றே பின்தங்கியிருந்தது எனலாம்....- - -<தொடர்ச்சி>

காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்

- - -சங்க இலக்கியப் பதிவுகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கி.மு. 1000ஆவது ஆண்டு தொடங்கித் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை மீளக் கட்டுதல் என்பது சிரமமானதே என்பதோடு அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டால் ஆரிய-திராவிட இனவாதம் என்பது போன்ற எளிமையான வாய்ப்பாடுகளின் அடிப்படையிலான அரைகுறைப் புரிதலே விளையும். சான்றாகக் காமவேள் வழிபாடு, காமன் பண்டிகை போன்றவற்றில் சுதேசித்தன்மை (தமிழ் மரபு) எத்தனை விழுக்காடு உள்ளது என்பது போன்ற கணிப்புகள் மிகக் கடினமானவை ஆகும்.....- - -<தொடர்ச்சி>

தமிழரைத் தேடி - 3

- - -இச்சமூகங்கள் கற்பு தவறிய பெண்களுக்குக் கடுமையான தண்டனைகளை வகுத்ததுடன், கற்பு தவறாமைக்கு மிகக் கடுமையான வழிமுறைகளையும் கைக்கொண்டன. அரேபியப் பெண்கள் உடலை முழுவதுமாக மூடிக்கொள்ளுதல், சில பண்டைய சமூகங்களில் அல்குல் பூட்டு பயன்படுத்தப்படுதல் போன்ற வழிமுறைகள் கற்பு நெறியைக் கடைப்பிடிப்பதற்கெனப் பின்பற்றப்பட்டன....- - -<தொடர்ச்சி>

தமிழரைத் தேடி - 2

- - -இதனை வேளாள மாயை என அழைப்பது பொருத்தமாக இருக்கும். வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்....- - -<தொடர்ச்சி>

தமிழரைத் தேடி - 1

- - -பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சமூக வரலாறு பல புதிர்களை உள்ளடக்கியதாக உள்ளது. தொல்லியல் தடயங்கள் கூறும் செய்திகளை முமுமையாகக் கணக்கிலெடுத்துக்கொண்டு விருப்பு வெறுப்பற்ற நிலையில் தமிழ்ச் சமூக வரலாற்றை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும். பண்பாட்டு மானுடவியலில் முற்றிலும் புதிய கோட்பாடு ஒன்று இங்கு முன்வைக்கப்பட உள்ளது...- - -<தொடர்ச்சி>

வழக்குரைக்கும் மணிமேகலையும் தண்டிக்கத் துடிக்கும் தமிழ்க் காவலர்களும்

- - -நாகரிகம் - அநாகரிகம் என்பவையெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு விதமாகவே வரையறுக்கப்பட்டுள்ளன. மேலாடையே அணியாமல் ‘தொய்யில்’ என்ற வண்ண அலங்காரத்தால் மார்பகங்களை மறைப்பது(!)கூடச் சங்க காலத்தில் வழக்கில் இருந்ததுண்டு. எனவே, தமிழ்ப் பண்பாடு என்று ஒன்றைப் பொதுமைப்படுத்தி ஒற்றைப் பார்வையில் பார்ப்பதே அரைகுறையான புரிதலில் விளைவதாகும்.- - -<தொடர்ச்சி>

ஆரியக்கூத்தும் வேளாள மாயையும் (அ.மார்க்ஸ் கட்டுரைக்கான எதிர்வினை)

- - - திராவிட இயக்கத்தின் அந்தக் கருத்துதான் இன்றைக்கு வரையிலும் தமிழ்ச் சமூகத்தில் முழு ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஆனால், அக்கருத்தைக் கடந்து பல்வேறு உண்மைகள் இன்றைக்கு வெளிப்பட்டுள்ளனவேயன்றி அவை பொதுக் கருத்தாகிடவில்லை. உதாரணமாக அறிவியல் ஆய்வுகளின்படி காலாவதியாகிவிட்ட குமரிக்கண்ட கருத்தாக்கத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் இன்றைக்கும் இருக்கின்றனர்.- - -<தொடர்ச்சி>

தமிழ்ப் பற்றும் திராவிடப் பம்மாத்தும்

- - - ஆரியத்துக்கு எதிரானது திராவிடம் என்ற கருத்தியல் நிலைப்பாட்டை உருவாக்கி அதற்கு ஒரு சித்தாந்த வடிவத்தைக் கற்பித்தவர்கள் தமிழக வேளாளர்களே என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்தவர் க.கைலாசபதி ஆவார். அதற்காகத் தமிழியல் ஆய்வுலகம் அவருக்குக் கடமைப்பட்டுள்ளது. இந்தக் கடமை உணர்வை வழிபாட்டு மனப்பான்மை என்று சொல்வது கட்டுரை ஆசிரியரின் வேளாளச் சார்பு நிலையை வெளிப்படையாகக் காட்டுகிறது. - - -<தொடர்ச்சி>

சத்திரிய இராமனும் பிராம்மண இராவணனும்

- - - இராமசேது என்பதைக் கற்பனை என்று சொல்லிக் கொண்டே, இராவணன் என்ற திராவிட மன்னன் வீழ்த்தப்பட்டது வரலாறு என்று புரட்டிப் பேசுகிற பாசிச மனப்போக்கு வரலாற்று ஆய்வு எனும் போர்வையில் இன்றைக்கும் தமிழகத்தில் ‘அரச மரியாதையுடன்' உலா வந்து கொண்டிருக்கிறது. சுருக்கமாக இதனைத் திராவிட மாயை என்றே சொல்லலாம். வரலாறு என்பது மிகவும் சிக்கலானது; வரலாற்று ஆய்வு என்பது மிகவும் நுட்பமானது. - - -<தொடர்ச்சி>

வரலாற்று நோக்கில் தமிழ்ச் சமூகமும் கள்ளும்

- - - அன்றைய நிலையில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனும் (கண்ணகிக்குக் கோயில் கட்டிய அதே செங்குட்டுவன்தான்) குடிகாரர்கள் என்றால் ராமனும் குடிகாரன்தான். ஆனால் அவர்கள் ஊரெல்லாம் கள்ளுக் கடையையும் சாராயக் கடையையும் திறந்து ஆறாக ஒடவிட்டுத் தங்கள் கஜானாக்களை நிரப்பிக்கொண்டுத் தாங்கள் மட்டும் புனிதர் வேடம் போட்டுத் திரிந்தவர்கள் அல்லர். - - -<தொடர்ச்சி>
New S.Ramachandran's article in Dinamani (24/1/2008)
சித்திரையில்தான் புத்தாண்டு

Our researcher Pravaahan's writings on Four Varnas
சான்றோன் எனும் ஒற்றைச் சொல்